என்னித்திரையில் நித்தம் வரும்
என்னவளே ......
என்னெஞ்சில் நீங்காத இடம் பெற்ற
பொன்மகளே .......
நாடு பல கடந்து
வாழ்வில்
ஏற்றம் பல அடைந்து
என்னையே நான் மறந்தாலும்
நாளும் உனை தழுவிடுவேன்
என் காதலியாக
அனுதினமும் தொழுதிடுவேன்
என் அன்னையாக
எந்நாளும் உனை மறவேன்
என்தாயே!! தமிழ் மகளே!!
பிரபு