03 April 2008

நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!

நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!

ஒவ்வொரு மாதமும்

இருவரின் முகமும்


தொடக்கத்தில் பிரகாசமாகவும்

பின்பு தேய்ந்தும் போவதால் ..............


குறிப்பு: சம்பள கவர்க்கு wait பண்ற பெண்கள சொன்னேன்பா


பிரபு

உண்மை ஒரு நாள் வெளியே வரும்.


மிகவும் புகழ் பெற்ற ஜென் மாஸ்டர் அவர். ஜென் தத்துவதில் அவரது ஈடுபாடும், தத்துவங்களை விளக்கும் தன்மையும் நாடுகடந்து அவரைப் புகழ் பெறச்செய்திருந்தன. ஜென் மாஸ்டர் வசித்த வீட்டின் அருகில் இருந்த வியாபாரிக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். ஒரு நாள் திடீரென்று அந்த மகள் குழந்தை பெற்றாள். அப்பெண்ணின் தந்தைக்கோ பயங்கர அதிர்ச்சி. எவ்வளவு வற்புறுத்தியும் இதற்கு யார் காரணம் என்பதை அந்தப் பெண் கூற மறுத்தாள் கடைசியில் ஜென் மாஸ்டர் தான் காரணம் எனக் கூறினாள். மிகுந்த கோபத்துடன் , குழந்தையுடன் மாஸ்டரிடம் வந்த வியாபாரி, இந்த குழந்தைக்கு நீங்கள்தான் தந்தையாமே? என்று கேட்டார். மாஸ்டர் சிறிதும் பதறாமல் 'ஓ அப்படியா! ' என்றார், மாறாத புன்னகையிடன். கடைசியில் குழந்தையை மாஸ்டரிடமே ஒப்படைத்து விட்டார்கள். மாஸ்டர் கொள்கை தவறிவிட்டதாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது பெயருக்கும் நீங்காத களங்கம் உண்டானது, எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாத மாஸ்டர் கண்ணும் கருத்துமாக குழந்தையை வளர்க்க ஆரம்பித்தார். ஒரு வருடம் கழித்து குழந்தைக்கு உண்மையான தந்தை மார்க்கெட்டில் இருக்கும் ஒரு வாலிபன் தான் என்று உண்மையை கூறினாள்,அந்தப் பெண். வியாபாரி ஜென் மாஸ்டரிடம் வந்து மன்னிக்கும் படி வேண்டி, குழந்தையை தந்து விடுமாறு மன்றாடினார். எந்த ஒரு தயக்கமும் இன்றி குழந்தையைக் கொடுத்த மாஸ்டர் கேட்டார், ஓ அப்படியா!

நீதி: பிறருக்கு நன்மை விளையும் எனில் பழியையும் சுமக்கலாம். அனால் நீரின் ஆழத்தில் வைக்க பட்ட பந்தைப் போல் உண்மை ஒரு நாள் வெளியே வரும்.