17 November 2009

கடி கடி கடி ஜோக்

அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?

த்ம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.

------------------------------------------------------------------------------------------------

நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?

போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.

------------------------------------------------------------------------------------------------


வாத்தியார் : A=B, B=C அப்படின்னா A=C. குமார் இதை விளக்கு?

குமார் : சார், ஐ லவ் யூ, லவ் யுர் டாட்டர், சோ, ஐ லவ் யுர் டாட்டர்.
கரெக்ட்டா சார்?

------------------------------------------------------------------------------------------------


வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும்,
கீழே வி்ழுது, ரெண்டையும்் கூட்டினால் என்ன வரும்?

மாணவன் : குப்பை தான் சார்.

------------------------------------------------------------------------------------------------


உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?

தெரியல.....

பல் டாக்டருக்கு தான்.

எப்படி?

அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.

------------------------------------------------------------------------------------------------

File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்?

File - உட்கார்ந்து பார்க்கனும்,

Pile - பார்த்து உட்காரனும்.

------------------------------------------------------------------------------------------------


குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?

அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?

------------------------------------------------------------------------------------------------


வாத்தியாரை விட கோழி தான் Great. எப்படி?

வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார்,

ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்.

------------------------------------------------------------------------------------------------


பாயசம் தான் ரெடியாயுடுசே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம், பாயசம் 2 தரம்,பாயசம் 3 தரம்ன்னு கத்தர?

பாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்.

------------------------------------------------------------------------------------------------


டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"அ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?

அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்.

------------------------------------------------------------------------------------------------


என் கணவர் என்னை கடி ஜோக் சொல்ல சொன்னார், நான் மாட்டேன்னிட்டேன்,

ஏன்டி?

அவரை வேனும்மின்னே 'no'கடிக்கதான்.

------------------------------------------------------------------------------------------------


ஏண்டி, பரிட்சைக்கு போகும் போது நிறைய பரிசு வாங்கிட்டு போற?

எங்க டீச்சர் தான் சொன்னாங்க, பரிட்சைல் நல்ல 'Present' பண்ணனும்ன்னு.

------------------------------------------------------------------------------------------------


Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?

ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'டீரீஸ் இருக்கு.

------------------------------------------------------------------------------------------------



ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?

அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.

------------------------------------------------------------------------------------------------


டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?

சுனில் பவுடர்.

என்ன செண்ட் யூஸ் பண்ணற?

சுனில் செண்ட்.

என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?

சுனில் ஹேர் ஆயில்.

ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?

இல்லடா, சுனில் என் ரூம் மேட்.

------------------------------------------------------------------------------------------------


ஒரு பூனை ஏன் ஒரூ குழந்தைகள் பள்ளிகூடத்தை சுத்தி சுத்தி வருது?

அது ஒரு 'எலி'மெண்டரி பள்ளிகூடமாம்.

------------------------------------------------------------------------------------------------

13 November 2009

நடிகர் (அப்படின்னு சொல்லிட்டு இருக்கிற) விஜய் ஜோக்ஸ்

தலைவர் விஜய் ஹீரோவா நடிக்காத விட காமெடியான நடிச்சா படமும் 100 நாள் ஓடும் தயாரிப்பாளரும் பாவம் பொழச்சுகுவாறு,

சரி நாம ஜோக்ஸ் பாப்போம்

------------------------------------------------------------------------------------------------

காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?

கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.

காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?

கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.

------------------------------------------------------------------------------------------------

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே

நாலுமாசம் தூங்க மாட்டே


ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா

நீ நடிச்சாத்தான் தாங்க முடியல


------------------------------------------------------------------------------------------------

பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...

நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க

விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க

நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..

------------------------------------------------------------------------------------------------

டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?

dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....

டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....


------------------------------------------------------------------------------------------------

சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா?


கதையை ஜீரணிக்க முடியாததால்.

------------------------------------------------------------------------------------------------

villu film record:


இந்த வார விற்பனை:

அமுர்தாஞ்சன் 30000

அனாசின் 20000

poison:10000

அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி....


------------------------------------------------------------------------------------------------

எங்கே கொஞ்சம் சிரிங்க....

கொஞ்சம்...

வேணாம் சொன்னா கேளுங்க ...

சிரிக்க வச்சுடுவேன்....

இப்ப சிரிக்க போறீங்க .....

இதோ வந்துடுச்சு....

"DR.விஜய்"
(ஹி ஹி ஹி)


------------------------------------------------------------------------------------------------

அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?

ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

------------------------------------------------------------------------------------------------

விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?


அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.

------------------------------------------------------------------------------------------------

விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க

------------------------------------------------------------------------------------------------

கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....


------------------------------------------------------------------------------------------------

ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

------------------------------------------------------------------------------------------------

போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?

கைதி : படம் பார்க்கணும்...

போலீஸ் : சரி குருவி போகலாமா ?

கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

------------------------------------------------------------------------------------------------

ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர்:யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

------------------------------------------------------------------------------------------------

விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....

இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....

------------------------------------------------------------------------------------------------

நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.

நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?

------------------------------------------------------------------------------------------------

வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூனு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது?

------------------------------------------------------------------------------------------------

அருணாசலம் ரீமிக்ஸ் ;

ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?


ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,


------------------------------------------------------------------------------------------------

விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?

பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

------------------------------------------------------------------------------------------------

நண்பர் : நான் elevator ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....

விஜய் : நீங்களாவது பரவாஇல்லை,நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்சு...

------------------------------------------------------------------------------------------------

கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,

"யார் அந்த குருவி விஜய்"

------------------------------------------------------------------------------------------------

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்கு இது போதும்.

------------------------------------------------------------------------------------------------

மறுபடியும் ஜோக்ஸ்

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

------------------------------------------------------------------------

பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!

------------------------------------------------------------------------

ஒருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை....
மற்றவன்: ஏன்?
ஒருவன்: எல்லா சர்தாரும், "Enter ur PIN"ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன சொருகிடுறாங்க.

------------------------------------------------------------------------

ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க.........
உமா: சாரிங்க...நான் இப்பொ சென்னைல இருக்கேன்.

------------------------------------------------------------------------

வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"

------------------------------------------------------------------------

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

------------------------------------------------------------------------

TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????

------------------------------------------------------------------------

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

------------------------------------------------------------------------

அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

------------------------------------------------------------------------

"சித்தப்பா செத்துட்டாரு... சாவுக்கு எல்லாமே நான்தான் செஞ்சேன்!"

"சரி.. சித்தப்பா எப்படிச் செத்தாரு?"

"அதான் சொன்னேனே... எல்லாம் நான்தான் செஞ்சேன்!"


------------------------------------------------------------------------

ஒருவர்: பஸ்ஸ்டாப்புல நின்னு மேலயே பாத்துகிட்டு இருக்கிங்களே ஏன்?

சர்தார்: சென்னைக்கு போற பஸ்ஸு ரெண்டு மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க


------------------------------------------------------------------------

பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.

புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு

பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு

புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.

------------------------------------------------------------------------

பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?

வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?

பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.

------------------------------------------------------------------------

ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்

டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?

ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது

------------------------------------------------------------------------

சர்தார் 1: வெயிட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கல

சர்தார் 2: அப்படி என்ன படிப்பு படிச்சுருக்க

சர்தார் 1: pre (Kg) L(Kg) U(Kg)

------------------------------------------------------------------------

கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?

மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.

கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு

22 May 2009

கலைஞரின் மஞ்சள் துண்டு பேரம்

போன மச்சான் திரும்பி வந்தான்!

மந்திரிசபையில மஞ்சள் துண்டு போட்டு இடம் பிடிக்க சென்ற தமிழின தலைவர் வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாக தெரிகிறது.

இலங்கை விவகாரத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் 'திருப்தி' அளிப்பதாக திருவாய் மலர்ந்த தமிழின தலைவர் சீட்டு பேரத்தில் திருப்திக்கு பதிலாக காங்கிரஸ் 'திருப்பதி' அளிப்பதாக கூறி சென்னைக்கு டிக்கெட்டு போட்டு இருக்கிறார்.

வெளியே இருந்து ஆதரவு என்பதன் மூலம் கூட்டணிக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு என்பது தெளிவாகிறது. நாளைக்கு முரசொலியில் இதுபத்தி உடன்பிறப்பிற்கு விளாவரியாக கவிதை எழுதி கண்ணீர் விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்யபோகிறார் வாழும் வள்ளுவர் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் எப்படியாவது பேரம் பேசி மறுபடியும் சீட்டு பிடிப்பார் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

இப்போதைக்கு போன மச்சான் திரும்பி வந்தான் கோவணத்தோட என்று தெளிவாகிறது.

இது ஓர்குட்டில் நண்பர் ஒருவர் பதிவிட்டது.

நான் தனிப்பட்ட முறையில் இது நாள் வரைக்கும் எந்த ஒரு (ஓட்டு பொறுக்கி) அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்து இல்லை. மேலும் ஓட்டு போடும் வயது வந்த சில வருடங்களில் லண்டன் வந்து விட்டதால் அதற்கான வாய்ப்பும் இல்லாமலே தான் போய் விட்டது. பாமரர்களில் ஒருவனாய் என்னுடைய கேள்வி இது தான். லட்ச கணக்கில் மக்கள் ஈழத்தில் செத்து விழுந்த போது கூட வெறும் ௨ மணி நேரம் உன்ன விரதம் என்ற பெயரவில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய நம் மாண்புமிகு முதல்வர், அதற்கடுத்த வந்த நாட்களில் தனது உடல் நிலை மிக மோசமாக உள்ளதாகவே காட்டி கொண்டார். அதற்கு தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இருந்ததாலோ அல்லது தனது குடும்பத்தை அதிகாரத்தில் அமர வைக்கும் போது மக்கள் தம் மீது பரிதாப பட வேண்டும் என்பதாலோ தெரியாது .... ஆனால் தேர்தல் முடிந்த இரெண்டே நாளில் வெற்றிகளிப்பில் முதல்வர் வெகு விரைவிலேயே குணமாகி விட்டது மட்டும் இல்லாமல் பல்லாயிரம் மைல்கள் சென்று பேரம் பேசி இருக்கிறார். இப்பொழுது நண்பர் சொன்னது போல் அங்கும் மஞ்சள் துண்டு பேர நாடகம் தோல்வியில் முடிந்தாலும் நிச்சயம் நம் முதல்வர் தான் நினைத்ததை சாதித்து காட்டுவார் என்றே நம்புகிறேன்.

லட்ச கணக்கில் மக்கள் ஈழத்தில் செத்து விழுந்த போது கூட காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை திரும்ப பெறாத அல்லது பெற கூட விரும்பாத நம் முதல்வர் தன குடும்பத்துக்கு தான் கேட்ட மந்திரி பதவி கிடைக்க வில்லை என்றதும் வெளியில் இருந்து ஆதரவு என்று சொன்னாரே பார்க்கலாம்.... என்னே அவரது தமிழ் பாசம் !!!தமிழ் பற்று !!!! தமிழ் மக்கள் மீதான அக்கறை.

இவ்விடயத்தில் நான் ஜெயலலிதா அம்மாவையோ, கோபால்சாமி அண்ணனையோ, ராமதாஸ் மாமவையோ குறை கூற முடிய வில்லை. ஏனெனில் அவர்கள் கட்டவிழ்த்து விட்ட உண்மையான அல்லது பொய்யான பிரசாரங்களை நம்பாமல் மக்களே அவர்களுக்கு தண்டனை கொடுத்து விட்டனர். மேலும் அவர்கள் இப்பொழுது பல் பிடுங்க பட்ட பாம்பு. அதிகாரமில்லாதவர்களை என்னவென்று கேட்பது.

அதனால் தான் தமிழின தலைவன், தன்மான சிங்கம், அரசியல் சானகியன் தலைவர் தாத்தா அவர்களை கேட்க வேண்டியதை இருக்கிறது.

நீர் சாவதற்குள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வதை உத்தேசம். உமது குடும்ப மக்களை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் அரசர்களாக்கி எமது மக்களை அவர்களுக்கு அடிமைகளாக ஆக்குவதை விட.....


pirabu

உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி

உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித் துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

புலிகளின் அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப் பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Nandri: nakeeran (ITHU POIYAAGAVE IRUNTHAALUM NAAN ITHAI THAAN NAMBUVEN)

05 May 2009

நடைபிணமாக ஈழக் குழந்தைகள்!

நடைபிணமாக ஈழக் குழந்தைகள்!

''ஆமி மாமா.. சோறு போடுங்க...''

ன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு... தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்கு தல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,

''ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி


பேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள ராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டது. மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

ராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தை கள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள். பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை, மனசாட்சி யுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனித் தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தை களைத் தனிமைப்படுத்தும் சிங்கள ராணுவம், அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது. நிழலுக்குக் கூட வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தை களுக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது, ராணுவத்தினரிடம் பிடிபட் டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க... அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி விட்டது. ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் ராணு வத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்! பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன. கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர், அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது. ராணுவத்தின் நடவடிக் கைகளை ஆழமாகக் கவனித்தால்... 'இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்' என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது. வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ், இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான்!'' என்கிறார் வேதனை மேலிட.

தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ, இதைவிடக் கொடூரம்..!

''கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன. ரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி, எப்போது மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!' என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம். சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறுமி, ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங் களையும், வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள்.

தற்போது முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால், சாளம்பன், ஒற்றைப் பனையடி ஆகிய பகுதிகளில் மட்டும் குறைந்தது இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள். 'கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்!' என உலகை ஏமாற்றி, பீரங்கித் தாக்குதலை வெறிகொண்டு நடத்திக் கொண்டிருக்கும் ராணுவம், மீதமிருக்கும் குழந்தைகளைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை! நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவில் அங்கே வந்துவிழும் குண்டுகளும், அதன் பெருஞ்சத்தமும், அதிர்வும் மிச்சமிருக்கும் குழந்தைகளை நடைபிணமாக்கி விட்டன. குண்டு விழும் சத்தம் கேட்டால் கூட இங்கிருக்கும் குழந்தைகள் தப்பி ஓட நினைப்பதில்லை. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்த மனநிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..!'' என்கிறார்கள் வன்னிப் பிரதேச தமிழ்ப் பிரதிநிதிகள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!

- இரா.சரவணன்

Courtesy: vikatan

ராஜபக்ஷேவின் அடுத்த திட்டம்...

ராஜபக்ஷேவின் அடுத்த திட்டம்...
- ப.திருமாவேலன்


''இரண்டே நாட்களில் 3 ஆயிரம் தமிழர்களைக் கொன்றிருக்கிறீர்கள்?'' என்று தமிழ் எம்.பி. இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். ''உறுப்பினர், சபையில் தவறான தகவலைத் தருகிறார். 3,000 பேர் இறந்ததை அவர் போய்ப் பார்த்தாரா?'' என்று அமைச்சர் கேட்கிறார். சிங்கள எம்.பி-க்கள் சிரிக் கிறார்கள்.

எழுகிறார் இன்னொரு தமிழ் எம்.பி, ''பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மக்களைக் குறி பார்த்துக் கொல்கிறது சிங்கள ராணுவம்'' என்று பதறுகிறார். உடன் எழும் இன்னொரு அமைச்சர், ''பதுங்கு குழியில் இருக்கும் பிரபாகரன் உங்களுக்கு இதைச் சொன்னாரா?'' என்று கேட்டதும், சபையில் பலத்த கைத்தட்டல். தமிழர்களின் ரத்தத்தைக் குற்றாலச் சாரலாகக் குளித்து மகிழும் சிங்கள இனவாத அரசின் ஆளுமையில் சிக்கித் தவிக்கும் சொந்தங்களைக் காப்பாற்ற எதுவும் நடக்க வில்லை.

இந்த ஆண்டு விடியும்போது தொடங்கி, கடந்த வாரம் வரை மட்டும் 4 ஆயிரத்து 795 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். நடுக்காட்டில், நட்ட நடு ரோட்டில் காயத்துடன் பெரும் அலறலுடன் கிடக்கிறான் தமிழன். சத்துக்கேற்ப மூன்று அல்லது நான்கு நாட்கள் கத்திக்கொண்டே கிடக்கும் உயிர்ச்சடலங்களைக் காப்பாற்ற ஐ.நா-வும் இல்லை. செஞ்சிலுவையும் இல்லை. அவர்கள் கும்பிடும் கடவுளும் இல்லை.

முல்லைத்தீவு காட்டு மரங்களுக்குள் டென்ட் பரப்பி, கையிருப்பில் இருக்கும் அரிசியைக் காய்ச்சிக் குடித்த வாழ்க்கையாவது நிரந்தரமானதாக இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்கள் மக்கள். ஆனால், அவர்களைக் கடந்த 4, 5 தேதிகளில் ரசயான வெடிகுண்டுகளை வீசி சின்னாபின்னப்படுத்தியிருக்கிறார்கள். அன்று மட்டும் 2,000 பேர் இறக்க... வெளியில் ஓடிவந்தார்கள் மக்கள். சுமார் 60,000 பேர் வந்திருப்பதாகச் சொல்கிறார் அமைச்சர். மொத்தம் இருந்தது 3 லட்சம் பேர். வெளியில் வந்தவர்களில் வயதுக்கு வந்த பெண்கள் மட்டும் சுமார் 600 பேர் தனி யாகப் பிரிக்கப்பட்டு, அனுராதபுரம் பகுதிக்கு அழைத் துச் செல்லப்பட்டுள்ளனராம். இளைஞர்கள் ஆயிரம் பேர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களது கதி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சிங்களத்தில் தேசியத் தொழிலாக இப்போது மாறிவிட்ட கொலையும், கற்பழிப்பும்தான்!

''எங்களோட டென்ட்டை விட்டு மூன்று நாளுக்கு முன்னாடி இங்க வந்தோம். கட்டியிருந்த பாவாடை சட்டையோடு தண்ணிக்குள் நீந்தி வந்தேன். மாற்றுத் துணியில்லை. அங்கயே குண்டு சத்தம் இருந்ததால ரெண்டு நாளா பங்கருக்குள் இருந்தோம். அதனால சாப்பிடலை. இங்க வந்து மூணு நாளாச்சி. சாப்பிட எதுவும் தரல. குடிக்கத் தண்ணி இல்ல. சேறும் சகதியுமான துணியோடுதான் இங்கே இருக்கேன். எங்க அப்பா, அம்மா எங்க இருக்காங்கன்னு தெரியல!'' என்று ஒரு பெண் வாய்க்குள் முனகுகிறார். 40 வயது இருக்கும் அவருக்கு. 'எவ்வளவு தூரம் நடந்து வந்தீர்கள்?' என்று நிருபர் கேட்கிறார். இது அவரது காதுக்குக் கேட்கவில்லை. அடைத்துவிட்டது காது. கண்ணில் மேல் இமை எழும்ப நினைக்கிறது. முடியவில்லை. உதட்டுக்கு வெளியே நாக்கைக் கொண்டுவந்து ஈரப்படுத்த முயற்சிக்கிறார். நாவிலும் ஈரம் இல்லை. கையில், காலில் காயங்கள் இல்லை. ஆனாலும், அவரால் அசைய முடியவில்லை. இவரைப் போலத்தான் ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டடியில் கிடக்கிறார்கள்.

யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை இலங்கை அரசாங்கம். ஐ.நா., அமெரிக்காவில் தொடங்கி... இந்தியா, சீனா தவிர, அனைத்து நாடுகளும் கடுங் கண்டனம் செலுத்திய பிறகும் ராஜபக்ஷே நிறுத்துவதாக இல்லை. ஜெயவர்த்தனா காலத்தைவிடக் கோரமான நிலை என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர் களே!

''எங்கள் நாடு ராணுவமயமாகிக்கொண்டு வருகிறது. ஜனநாயகம், குடியாட்சி நெறிமுறைகள் அனைத்தையும் நொறுக்கிவிட்டார் ராஜபக்ஷே. தமிழர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, சிங்கள தேசமாக இலங்கையை அறிவிக்கத் திட்டமிடுகிறார். இதற்கு எதிராக இருக்கும் சிங்கள சக்திகளையும் நசுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு உதாரணம், யாரெல்லாம் அவரது ஆட்சி அமைக்க உதவினார்களோ, அவர்கள் அனைவரையும் ஒழித்துவிட்டார். மகிந்தா ஆட்சி அமைக்க ஜனதா விமுக்தி பெரமுனா உதவி செய்தது. அந்தக் கட்சியை இரண்டாக உடைத்தார். அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த சந்திரிகா குடியிருக்க அரசாங்க வீடுகூட இவர் தரவில்லை. தனது நண்பனான மங்கள சமரவீராவை நாட்டை விட்டு விரட்டினார். மகிந்தாவின் அரசாங்கத்தை உருவாக்க உழைத்த ஸ்ரீபதி சூரியாச்சியையே கைது செய்து விலங்கு போட்டார். பண்டாரநாயகா வம்சத்தினர் யாரும் அரசாங்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அதாவது உடனிருந்து உருவாக்கியவர்கள் யாரும் இல்லை.

இப்போது இருப்பதெல்லாம் அவரது தம்பிகள், குடும்பத்தினர் மட்டும்தான். யாரெல்லாம் இவருக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள்தான் இப்போது உடன் இருக்கிறார்கள். கோத்தபய ராஜபக்ஷே, சரத் ஃபொன்சேகா என இருவரும் அமெரிக்க பிரஜைகள். மகிந்தாவைச் சுற்றியிருக்கும் இன்னும் முக்கியமான நான்கு பேரும் வெளிநாட்டுப் பிரஜைகள். இவர்களை வைத்து சிங்கள பேரினவாத ஆட்சியை அமைப்பதுதான் மகிந்தாவின் திட்டம்'' என்று அங்குள்ள பத்திரிகையாளர்கள் சொல் கிறார்கள்.

'இலங்கை செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் எங்களது ஆதரவுள்ளது' என்று சீனா அறிவித்திருப்பதற்கும், ஐ.நா-வில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை அது தடுத்ததற்குமான பின்னணி இந்தியாவுக்கு எதிரானது. எதிர்காலத்தில் ஒரு பேரழிவை இந்தியாவுக்கும் சேர்த்து செய்ய ஆரம்பித்திருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே. அதன் விளைவுகள் சில லட்சம் தமிழர்களை மட்டுமல்ல, பல கோடி இந்தியர்களையும் பாதிக்கும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது!


courtesy: vikatan

29 April 2009

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள்

நான் 21 -ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறேனா என்ற சந்தேகமும், அது உண்மை என்றால் இனி தமிழ் இனத்திற்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி பயமும் வருகிறது. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு தமிழக அரசியல் வாதிகள் தன சொந்த இன மக்களின் தன உறவுகளின் ரத்தத்தை சுவைக்கும் மிருகங்களாவே மாறி விட்டதை பார்க்கும் போது எண்டா தமிழ் நாட்டில் பிறந்தோம் என்று மிகவும் வருத்த படுகிறேன். இத்தனை கொடுமைகளையும் பார்த்து கொண்டு என்னாலும் எதுவும் என் மக்களுக்கு செய்ய முடிய வில்லையே என்று எண்ணும் போது இயலாமையில் அழுகை மட்டுமே வருகிறது.

தமிழ் நாட்டிலோ அல்லது புலம் பெயர் மக்கள் சிந்துவதோ அல்லது சிந்த விரும்புவதோ வெறும் கண்ணீரை மட்டுமே ஆனால் ஈழத் தமிழர்கள் நாள் தோறும் சிந்துவதோ இவ்வளவு கொடுமையிலும் விடுதலை வேட்கை அடங்காத சிறுதும் சீற்றம் குறையாத தன ரத்தத்தை. யோசிப்பீர்களா நாற்காலி வெறி பிடித்த நயவஞ்சகர்களே !!!

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் அதிர்வின் Report
பிரசுரித்த திகதி : 29 Apr 2009

கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் முடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார்.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரவேண்டிய பொறுப்பை மக்களாகிய உங்களிடன் நாம் ஒப்படைக்கிறோம். உண்ர்ச்சி மிகு அதிர்வு வாசகர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

மிக கொடுமையான அந்த படங்களை காண

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1240995334&archive=&start_from=&ucat=3&

21 April 2009

சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்

நாங்கள் சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்: விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.
அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், "நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்" எனவும் கோரியிருக்கின்றார்.
"நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது" எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய புலித்தேவன், "நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விசயத்தில் தலையிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
சிங்களப்படைகள் திங்கட்கிழமை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துமிருப்பதாகவும் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
"பொதுமக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதுடன், எம்முடன் இணைந்தும் போராடுகின்றனர். ஏனென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகத்தான் போராடுகின்றது" எனவும் தெரிவித்த புலித்தேவன், "அதனால்தான் அவர்கள் சுயவிருப்புடன் எமது அமைப்பில் இணைந்து போராடுகின்றனர்" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

courtesy: nakeeran

இலங்கையில் இரத்த ஆறு

இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்து நிறுத்த ஒரு சில மணி நேரமே உள்ளது

வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்கிழமை நண்பகலுக்கு முன்னர் சரணடைந்துவிட வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கும் நிலையிலேயே இந்த அச்சத்தை மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சரணடையாவிட்டால் தான் செய்யப்போவது என்ன என்பதை மகிந்த அறிவிக்கா போதிலும், "ஒரு இரத்த ஆறு ஓடலாம் என நாம் கவலையடைந்திக்கின்றோம்" என நியூயார்க்கை தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்பகத்தின் மூத்த ஆய்வாளரான அனா நிஸ்டால் தெரிவித்திருக்கின்றார்.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இந்த நிலை தொடரக்கூடாது என உணர்த்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு சில மணி நேரமே உள்ளது என அவர் வாசிங்டனில் உள்ள புரூக்கிங்க்ஸ் நிலையத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
"தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களைப் படுகொலை செய்வது போர்க் குற்றங்களாகக் கருதப்படும் என்பதையும், இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள், தளபதிகள் உட்பட அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அனைத்துலகம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

courtesy: nakeeran

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் வழியாகவும் உள்ளே புகுந்துள்ளனர்.
தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆயுதப்படையினர் முயற்சித்துள்ளனர்.
அதேவேளையில் முன்னணிப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் இந்தப் பொதுமக்களையே படையினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதனை எதிர்க்க முனைந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளின் போது சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தொடக்க கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20.04.09) ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 வரையிலானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இன்றும் இந்த நிலை தொடர்கின்றது.
படுகாயமடைந்து ஆபத்தான நிலைமையில் உள்ள 2 ஆயிரம் மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குமாறும் கப்பல் மூலமாக அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தொகையானவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருப்பதால் உடனடியாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்படுவதும் அவசியமானதாகியுள்ளது.
புதுமாத்தளன் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வந்துவிட்டதால் புதிய தளம் ஒன்றில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க கப்பல்கள் வந்து செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியுள்ளது.
மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மக்களைப் பயன்படுத்துவதும் கடுமையான போர்க் குற்றங்கள் என்பதுடன், இந்த மனிதப் படுகொலைக்குக் சிறிலங்கா அரசாங்கமும், ஆயுதப் படைகளின் தளபதிகளுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டியவர்களாகும்.
இந்த போருக்குள் அகப்பட்டுள்ள தமிழ்ப் பொதுமக்களை மீட்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
இந்தப் போர்க்குற்றங்கள் மிகவும் கடுமையானவை எனக்கருதும் விடுதலைப் புலிகள், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவசரமான அனைத்துலக ரீதியான நடவடிக்கை அவசியம் எனவும் கருதுகின்றது.
கடுமையான போர்க்குற்றங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீவிரமான மனிதாபிமானப் பிரச்சினையை எதிர்கொள்ளத்தக்க விதமாகச் செயற்படுமாறும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

courtesy: nakeeran

16 April 2009

ஈழத்தில் ஷாக்கிங் ஏஜெண்ட்!

ம்பலன் பொக்கனை, வலைஞர் மடம், மாத்த ளன், இரட்டை வாய்க்கால், இடைக்காடு, முள்ளிவாய்க் கால் ஆகிய ஆறு கிராமங்களும் கடல் பார்த்துக்கிடக்க... அதனைச் சுற்றிய ஐந்து முனைகளில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் குறி பார்த்து நிற்க... மூன்று லட்சம் தமிழ் மக்கள் வானம் பார்த்து நல்ல செய்தி வராதா என்று நிர்க்கதியாக, நிராதரவாக அலைய... 'இன்னும் ஒரு வாரம்தானாமே' என்று கொழும்பு சந்தோஷக் காற்றைப் பரவவிட... தமிழ் ஈழம் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது நிஜமா?

தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ளும் தனித் தமிழீழமா அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியா என்ற கேள்வி அப்புறம். அந்தப் பூமியில் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து காலம் கடத்திய கூட்டம், சில சொச்சமாவது மிஞ்சுமா என்ற கேள்விதான் ஐ.நா. வரை கேட்கிறது. யார் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் சிங்கள அரசாங்கம் இல்லை. இலங்கையைத் துண்டாடும் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமாக' ஆரம் பிக்கப்பட்ட மகிந்தாவின் தாக்குதலில், கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 77 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சொல்கிறார்.

'புலிகளைத்தான் கொல்கிறோம், பயங்கரவாதிகளைத்தான் தாக்குகிறோம், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தப் போகிறேன்' என்று மகிந்தா சொல்வதன் அர்த்தம்... யாருமில்லாத மயான அமைதியா?

கடந்த அக்டோபர் 14-ம் தேதி 'போர் நிறுத்தம் தேவை' என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம் நிறை வேற்றினார் முதல்வர் கருணாநிதி. அன்று முதல் இந்த வாரம் வரை மட்டும் 8 ஆயிரம் தமிழர்கள் குண்டு போட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 15 ஆயிரம் பேர் ஊனமானார்கள். புலிகளைச் சண்டை போட்டுக் கொல்ல முடியாமல் வானத் தில் இருந்து குண்டுகள் போட்டு மக்களைக் கொல்வதை ஐ.நா. சபையில் ஆரம்பித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அத்தனையும் சொன்ன பிறகும் சாவும் நிற்கவில்லை... சண்டையும் நிற்கவில்லை.

கடந்த 8-ம் தேதி மட்டும் 189 பேர் கொல் லப்பட்டார்கள். போர் சூழ்ந்த புதுக்குடியிருப்புப் பகுதியில் இயங்கும் தொடக்கச் சுகாதார நிலையத்தில் பால் மாவு வாங்க நின்றிருந்த தமிழ்க் குடும்பங்கள் தலையிலும் குண்டு இறங்கியது. கற்பகநாதன் கஜீபன் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையும், யோசேப் மார்த்தம்மா என்ற 76 வயது பாட்டியும் பலியானார்கள். ஆர்ட்டிலறி எறிகணைகள், பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி, ஆர்.பி.ஜி. உந்துகணை, தொலை தூரத் துப்பாக்கி. ஆகிய ஐந்தும்தான் ஆரம்பத்தில்! கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரஸூம் சில மாதங்களுக்கு முன் வந்தன. இப்போது... ரசாயன குண்டுகள். இதற்கு 'ஷாக்கிங் ஏஜென்ட்' என்று பெயராம்!

கடந்த 4-ம் தேதி மிகப் பெரிய தாக்குதலுக்குப் புலிகள் திட்டமிட்டு ஓர் இடத்தைத் தாண்டி இன்னோர் இடத் துக்கு இடம்பெயர்ந்துகொண்டு இருந்ததாகவும், அதை ரேடார் மூலம் கண்டுபிடித்த ராணுவத்தினர், அந்த இடத்தை நோக்கி இந்த ரசாயனப் புகையைக் கிளப்பியதாகவும் தகவல். புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதிகளாக இருந்த தீபன், விதுஷா உள் ளிட்ட 127 பேர் இறந்துபோனார்கள். இதே தாக்கு தலில் 1,300 தமிழர்களும் பலியாகி இருக்கிறார்கள். தமிழர்களை இனி ஒட்டுமொத்தமாகக் கொல்லத் திட்டமிட்டிருக்கும் முறை இதுதான்.

''இந்த வகையான ரசாயனக் குண்டுத் துகள்கள் தோலில் பட்டதும், அந்த இடத்தில் கொப்புளம் வரும். உடனே அவை வெடிக்கும். உடம்பு முழுக்க இது போன்ற கொப்புளங்கள் வந்து வெடித்து ரசாயனங்கள் உள்ளே போய் உயிரைப் பறிக்கும். முன்பெல்லாம் ரசாயனக் குண்டுகளின் புகைகள் மூச்சுக்காற்று வழியாக உடம்புக்குள் போய் உயிரைப் பறித்துவிடுவதாக இருந்தது. ஆனால், அதிலிருந்து தப்பிக்க மாஸ்க் வந்துவிட்டது. அதையும் புலிகள் பயன்படுத்துகிறார்கள். எனவேதான் இப்போது தோலைத் தாக்கும் ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன'' என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து இலங்கை மனித உரிமை அமைப்புகள் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளன.

பூநகரில் ஆரம்பித்து புதுக்குடியிருப்பு வரை சிங்கள ராணுவத்துக்கு இத்தனை பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்தது 58, 59-வது படைப் பிரிவுகள்தான். அதிகமான அளவு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இதில் இருந்தார்கள். ஆனால், மூன்று தாக்கு தல்களில் இதில் இருந்த 3,500 பேரைப் புலிகள் கொன்றுவிட்டதாகவும்... எனவே, ராணுவத் தரப்பு இனி போரில் வெல்ல முடியாத நிலை யில் ரசாயன குண்டுகளையே நம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது சாவுகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த ஐந்து கிராமங்களையும் குறிவைத்துத் தாக்கும்போது அங்கு வாழும் 3 லட்சம் மக்களின் கதியும் அதோ கதிதான்.

புதுக்குடியிருப்புக்கு தென்மேற்கு, வடக்குப் பகுதியில் புலிகள் அமைப்பு மையம்கொண்டு இருப்பதாக நினைத்து, ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஆனால், அது முழு உண்மைஅல்ல என்ற தகவல் இப்போது சொல்லப்படுகிறது. 'பூநகரியை ராணுவம் பிடித்ததுமே புலிகள் அமைப்பு 50, 100 பேர்களாகப் பிரிந்து, தமிழ்ப் பகுதியின் காடுகளுக்குள் பரவிவிட்டனர். யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்புக் காடுகளுக்குள் இவர் கள் ஐக்கியமாகிவிட்டார்கள். மரபுவழி ராணுவ மாக இருந்தவர்கள் மீண்டும் கெரில்லாப் படை யாகப் பிரிந்துவிட்டார்கள். எனவே, புலிகள் அமைப்பை முழுமையாகத் துடைத்தெடுக்கப் போவதாகச் சொல்லி, சிங்கள ராணுவம் செய்யப் போவது தமிழ் மக்களைத் துடைத்தெறிவதாகத்தான் இருக்கும்' என்று செய்திகள்.

''அங்கிருப்பவர்களை அப்பாவி மக்களாக மட்டும் சொல்ல முடியாது. அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள்தான். அவர்கள் காட்டுக்குள் இருந்து தப்பித்து வந்தாலும், பொது மன்னிப்பு வழங்க மாட்டோம்'' என்று ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, ராணுவத்தின் பார்வையில், ஒன்றரை வயது கஜீபனும் 76 வயது மார்த்தம்மாவும் பயங்கரவாதிகள்தான். மக்கள் இப்போது அடர்ந்த பனைமரங்களுக்கு மத்தியில் டென்ட் அடித்தும், மேற்கூரை இல்லாமலும் பொழுதைக் கடத்துகிறார்கள். வெப்பக் காலத்தில் நிழலற்ற பனைமரத்துக்குக் கீழே வாழ்வதன் அவஸ்தை அவர்களுக்கு மட்டும் தெரியும். எல்லோருக்கும் ரசாயனக் குண்டு வீசாமலேயே கை, கால்களில் கொப்புளங்கள் வெடித்திருக்கின்றன. சோறு பொங்கிய தண்ணீரும், பருப்பு வேக வைத்த தண்ணீரும்தான் உணவு. பகல் முழுவதும் வெப்பக் காற்றில் உடல் கருக, நள்ளிரவோ பயங்கரமானதாக இருக்கிறது. துக்கம் தொண்டையை அடைப்பதால் தூக்கமில்லை. மிதமிஞ்சிய முழிப்பு அதிகாலையில் கண்ணை மயக்கும்போது, வெடிச் சத்தம் பலரை அப்படியே கொல்கிறது. சிலரை முழிக்க வைத்து அழச் சொல்கிறது.

இப்படியாக எழுதப்படும் இலங்கை வரலாற் றில்...

அரையாண்டுக்கு முன்னால் கிளர்ந்த அகிம்சைப் போராட்டம் பயனற்றுப்போனது. இளைஞர்கள் பலர் ஆயுதம் தூக்கினார்கள். அப்பாவி ஆண்களும் பெண் களும் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் அபலைகள் தாய்த் தமிழகத்துக்குத் தப்பி வந்து, சிறுகுடிசைகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். மூன்று லட்சம் பேர் விட்டால் போதும் என்று வெளிநாடுகளுக்குத் தப்பிப் போனார்கள். யாழ்ப்பாணம் பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவால் அமுக்கப்பட்டார்கள். கிழக்கு மக்கள் எந்த வசதியும் இல்லாமல் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆனார்கள். கொழும்புத் தமிழர்கள் அடையாளம் அனைத்தையும் இழந்து சிங்கள மக்களாக உருமாறினார்கள். 30 ஆயிரம் புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மடிந்து போனார்கள். ஆறு காலப் பூசை நடந்த கோயிலில் மணியடிக்க ஆளும் இல்லை; மனமுருகி வணங்கப் பக்தனும் இல்லை. விவசாய நிலங்கள் வீடுகளாக்கப்பட்டு சிங்களர்கள் குடியேற்றப்பட்டார்கள். சைவப் பெயர்கள் அனைத்தும் சிங்களம் ஆக்கப்பட்டன. கடலுக்கு மீன் பிடிக்க மட்டுமல்ல, காற்று வாங்கவும் யாரும் வரவில்லை. வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் பேர் கொல்லப் பட்டார்கள்; இரண்டு லட்சம் பேர் மனநிலை பாதிக் கப்பட்ட நிலையில் கம்பி வேலிக் கொட்டடிக்குள் அடைக்கப்பட்டார்கள்.

கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக் கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்!


COURTESY: VIKATAN

10 April 2009

'என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது...'' வன்னிக் காட்டில் பிரபாகரன் சபதம்?


சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள். கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன.

தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம்.
''ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான்
புலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளின் கவனம் ஈழத் துக்கு ஆதரவாகத் திரும்பியும் இந்தியாவின் தலையீடு இருந்ததால், போர்நிறுத்தம் சாத்தியமற்றுப் போனது. அதனால் ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்கும் வண்ணம், புலிகள் ஊடறுப்புத் தாக்குதலைக் கையிலெடுக்கத் தொடங்கினார்கள். இதில் சிங்கள ராணுவத்தினர் சிதறுண்டுபோனார்கள். ஆனால், போர் நிறுத்தத்துக்கு பதிலாக வெளிநாடுகளின் உதவியோடு கொடூர ஆயுதங்களைக் கொண்டுவந்து குவித்து, புதிய வியூகங்களை வகுத்துச் செயல்படத் தொடங்கிவிட்ட சிங்கள ராணுவம், கடந்த இரண்டுவாரங்களாக இந்தியாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி படுஉக்கிரமான தாக்குதலை நடத்திவருகிறது. இந்தியாவின் ஆயுதங்களை சரிவரப் பயன்படுத்த இலங்கை ராணுவத்தினருக்குத் தெரியாததால்... இப்போது இந்திய ராணுவத்தினரே போரில் குதித்துவிட்டார்கள். அதனால் ஈழப் போராட் டம் இன்னும் சில நாட்கள்கூட நீடிக்காது. முப்பதாண்டு காலமாக ஆயுதமேந்திப் போராடிய புலிகள் மடிகிற காலம் வந்துவிட்டது...'' என இலங்கை நிலவரத்தை கவலையோடு பகிர்ந்து கொண்டார்கள்.
பொறியில் சிக்கிய புலித் தளபதிகள்!
அவர்களே தொடர்ந்து பேசும்போது, ''கொடூரமான ஆயுதங்கள் கைக்கு வந்தவுடனேயே அசுரப் பாய்ச்சலால் புலிகளின் கைவசமிருந்த இரணைப்பாலை, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேறிய ராணுவத் தரப் பினர், புலிகளின் முக்கியத் தளபதிகளான கேணல் பானு, கேணல் லாரன்ஸ் ஆகியோரை உயிரோடு பிடிக்கத் திட்டமிட்டனர். பிரபாகரனின் அபிமானம் பெற்ற இந்த இருவரையும் உயிரோடு பிடித்தால், சித்ரவதை செய்து பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட முடியும் என்று கணக்குப் போட்டது ராணுவம். அதன்படி, ராணுவத்தின் முக்கியஸ்தர்களான பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமையில் 58-வது டிவிஷனும், கேணல் ரவிப்பிரியவின் தலைமையில் 68-வது டிவிஷனும், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் தலைமையில் 53-வது படையணியும் ஒருசேர வியூகம் வகுத்தன. அதன்படி, புலித் தளபதிகளின் உணவு விநியோகப் பாதைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. ஒரே நேரத்தில் புலிகளின் முக்கியத் தளபதிகளைக் குறிப்பிட்ட வளையத்துக்குள் கொண்டுவந்து, நான்கு முனைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது ராணுவம். எப்போதுமே பல கூறுகளாகப் பிரிந்து போர் செய்யக் கூடிய புலிகளின் தளபதிகள், ராணுவத்தின் சூழ்ச்சிக்கு இலக்காகி... அம்பலவன்பொக்கனை சந்திப்பை மட்டும் பயன்படுத்தி ஒரே குழுவாகினர். அந்த நேரத்தில் சிங்கள ராணுவத்தின் வலிமை வாய்ந்த விஜயா காலாட்படையும், கஜபா ரெஜிமென்ட் படையும் கைகோத்து, ஒரு சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் புலிகளையும் அவர்களின் தளபதிகளையும் மடக்கினர். கடைசி நேரத்திலேயே இந்த சூழ்ச்சி புலிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. அடுத்தகணமே அவர்கள் கடுமையான தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் பானு, லாரன்ஸ் உள்ளிட்ட தளபதிகளை உயிரோடு பிடிக்க நினைத்த சிங்கள ராணுவத்தினர், தாக்குதல் நடத்தாமல் புலிகளை சரணடையும்படி வேண்டினர். ஆனாலும், உயிரோடு பிடிபட்டால் என்னாகும் என்பது தெரிந்து புலிகளும் தளபதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். பதினாறு மணி நேரம் இரு தரப்புக்கும் தொடர்ந்து நடந்த தாக்குதலில் சில தளபதிகளும் சில புலிகளும் மட்டுமே தப்பிக்க முடிந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளும் புலித் தளபதிகளும் மொத்தமாகக் கொலையான விஷயம் அடுத்த நாள் காலையில்தான் புலிகளின் மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியவந்தது...'' என்று புலிகளின் பின்னடைவு குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.
''என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது...''
இலங்கை அரசு மற்றும் ராணுவத் தரப்பில் விசாரித்தபோது, ''இலங்கையில் இதுநாள் வரை சவாலாக இருந்துவந்த ஒட்டுமொத்தப் புலிகளையும் ஒடுக்கி விட்டோம். பிரபாகரன், ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக வன்னி காட்டுக்குள் தன்னுடன் ஒருசில புலிகளை மட்டும் அழைத்துக்கொண்டு போய்விட்டார். போகும்போது ஒரு விஷயத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார். 'இனி யாரும் என்னோடு தொடர்பு கொள்ள வேண்டாம். ராணுவம் காட்டுக்குள் வந்தாலும் நான் உயிரோடு சிக்க மாட்டேன். என் சாம்பல்கூட அவர்களின் கையில் கிடைக்கக் கூடாது...' என்று சபத மிட்டுச் சென்றிருக்கிறார். கூடவே, 'இந்திய அரசின் உதவிகளால்தான் ராணுவத்தை எதிர்த்துப் புலிகளால் முழு பலத்தோடு போரிட முடியவில்லை...' என்றும் சொன்னவர், இந்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். இருந்தாலும், பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளிலும் நாங்கள் இறங்கி இருக்கிறோம். அவருடைய மகன் சார்லஸ் ஏற்கெனவே எங்கள் தாக்குதலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். பிரபா கரனின் மற்ற பிள்ளைகளும் மனைவியும் லண்டன் போய்விட்டார்களாம். விரைவில் அவர்களையும் பிடிப்போம். இனி புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது... அதற்கு பிரபாகரன் ஜாதகமே சாட்சி. சமீபத் தில் பிரபாகரனின் ஜாதகம், போட்டோ ஆல்பமெல்லாம் அவர் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டபோது சிக்கியது. அந்த ஜாதகத்தை வைத்துக் கணித்ததில் பிரபாகரனுக்கு உடல்ரீதியாகப் பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது...'' என்கிறார்கள்.
வருமா வணங்கா மண்?
ஈழத்தில் பசியாலும் காயங்களாலும் அல்லல்படும் தமிழ் மக்களுக்கு உதவும் விதமாக பிரிட்டனில் இருந்து 'வணங்கா மண்' என்ற கப்பல், உலகத் தமிழர்கள் திரட்டிக் கொடுத்த பொருட்களோடு கடந்த சில தினங்களுக்கு முன் முல்லைத்தீவுக்குக் கிளம்பியிருக்கிறது. பிரிட்டன் எம்.பி-க்கள் உள்ளிட்ட பல நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையின் கொடூரத்தையும் அப்பாவித் தமிழ் மக்களின் துயரத்தையும் வெளிப்படையாகவே பேசி 'வணங்கா மண்' பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், இலங்கையின் கடற்படை அதிகாரிகளோ, 'வணங்கா மண் கப்பல் புலிகளுக்குச் சொந்தமானது. அதனால் எக்காரணம் கொண்டும் அதை வன்னிக்கு வரவிட மாட்டோம். மீறி அந்தக் கப்பல் வந்தால்... அதன் மீது சரமாரி தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்!' என பகீர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.


நன்றி
விகடன்