
என்னிடம் வெட்கப்பட்டு கொண்டு
பனிப்போர்வைக்குள் ஒளிந்திருக்கிறாள்
என் இயல்பு வாழ்க்கையின்
இயந்திரக் காதலி .....
பாவம் இவளுக்கு தெரியாது
மனிதக் காதலியிடம்
மனதை பறிகொடுத்துவிட்ட நானும் ....
வெட்கமில்லாமல் இவள் மீது
படர்ந்திருக்கும் இந்த
பனித்துளியும் ஒன்று தானென்று!!!!
இருவருமே காலைவரை
தூங்காது விழித்திருப்போம்
பொறுமையுடன் காத்திருப்போம்
ஆனால்
என்னவளை (சூரியனை) கண்டவுடன்
உருகி விடுவோம்...
பிரபு