25 November 2010

spectrum ஸ்காண்டல் burka dat - neera radia conversation

பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்


பர்கா: ஆ, நீரா?


நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.


பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.


நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.


பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.


நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?



22.5.2009



காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்



நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.


பர்கா: ஆம்.


நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.


பர்கா: ஆம்.


நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?


நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.


பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?


நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.


பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.


நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.


பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?


நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட


வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.


பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.


நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.


பர்கா: சரி.


... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.


நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.


நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?


நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்



மொழியாக்கம் நன்றி. தினமணி.

spectrum scandal veer sanghvi - neera radia conversation - வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல்

வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல்

20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள்

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.


வீர்: அது சரி.


நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.


வீர்: ஆம்.


நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.


வீர்: சரி.


நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?


நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?


வீர்: ஆம்?


நீரா: அப்படியா?


வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.


நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.


வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.


நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.


வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.


நீரா: ஆம், ஆம்.


வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.


நீரா: ஆம், ஆம்..


வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.


நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.


வீர்: சரி.


நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.


வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.


நீரா: சரி.


வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.


நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.


வீர்: சரி.


நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.


வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்...


நீரா: சரி.


வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...



23.5.2009



இரவு 10மணி 26நிமிடம்



42விநாடிகள்



நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...


வீர்: மாறன்.


நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)


ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...


வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?


நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...


வீர்: சரி.


நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.


வீர்: | 600 கோடி சரியா?


நீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.


வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?


நீரா: இல்லையா?




- நன்றி: "ஓபன்' வார இதழ்.

spectrum scandal - kanimozhi - neera radia conversation - கனிமொழி - நீரா ராடியா உரையாடல்

கனிமொழி - நீரா ராடியா உரையாடல்


22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்





கனிமொழி: ஹலோ


நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...


கனி: ம்ம்


நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...


கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?


நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...


கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.


அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?


நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.


கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.


நீரா: ம்ம்..


...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.


கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.


நீரா: ஓகே.


கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.



22.5.2009



மதியம் 2 மணி 46 நிமிடம்



15 விநாடிகள்




கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?


நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.


கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)


நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?


கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.


நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?


கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.


நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?


கனி: ஆம், ஆம்.


நீரா: இதுதான் அரசியல், மை டியர்.



22.5.2009



இரவு 8 மணி 04 நிமிடம்



19 விநாடிகள்



நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.


கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...


நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.


கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...


நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.



23.5.2009



காலை 9 மணி 59 நிமிடம்



2 விநாடிகள்



நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.


கனி: அது சரி.


நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.


கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.


நீரா: ஆம், சரிதான்.


கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.


நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.


கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.




- நன்றி: அவுட் லுக். தினமணியில் வந்த மொழியாக்கம்

Spectrum scandal - A. Raja - Neera Radia Conversation - ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்

22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்



நீரா: ஹலோ?


ராசா: ராசா பேசுகிறேன்.


நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.


ராசா: ஆ?


நீரா: பர்கா தத்


ராசா: அவர் என்ன சொல்கிறார்?


நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.


ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.


நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.


ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.


நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?


ராசா: ஆ?


நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.


ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.


நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...


ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.


நீரா: தனியாகவா?


ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.


நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?


ராசா: ஆம்.


நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.


ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...



22.5.2009



மதியம் 2 மணி 29 நிமிடம்




41 விநாடிகள்


நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?


ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?


நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.


ராசா: ம்ம்...


நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...


நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.


ராசா: ம்ம்.


நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....


ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...


நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?


ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...


நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.


ராசா: ம்ம்.


நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.


ராசா: ஓஹோ! ஓஹோ!


நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...


ராசா: ம்ம்.


நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...


ராசா: ஓ...


நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.


24.5.2009


காலை 11 மணி


5 நிமிடம் 11 விநாடிகள்


நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?


ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.


நீரா: தெரியும் அல்லவா?


ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.


நீரா:ம்ம்..


ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.


நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.


ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...


நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?


நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?


ராசா: எனக்குத் தெரியாதே.


நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.


ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...


நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.


ராசா: ஆ, இருக்கலாம்



- நன்றி: அவுட்லுக் - அரசியல் தரகர் ரீரா ராடியா உடனான ஆ.ராசா மற்றும் முக்கிய புள்ளிகளிடம் நடத்திய உரையாடலை இன்று தினமணி நாளேடு வெளியிட்டுள்ளது. தினமணியில் வந்த மொழியாக்கம்.

22 November 2010

நாடும் இந்நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !!!!


3rd generation high tech கொள்ளை!!!2G Spectrum scandal!!!

ஏன்டா எவனோ நாட்ட கொள்ளை அடிச்சதுக்கு இப்படி ஒரு தலைப்புனு கேக்கறீங்களா!!! நாம ஒட்டு போட்டு அனுப்பிய மகாராசன் பண்ணிய வேலைக்கு நாம தானே பொறுப்பு. அதனால தான் இப்படி ஒரு சாபம், அதுவும் நாம வாங்கிட்ட சாபம்..


என்ன நடக்கிறது நம் இந்திய நாட்டில், அதுவும் குறிப்பாக நம் தமிழ் நாட்டில், தமிழக அரசியல் தலைவர்களின் புண்ணியத்தால்!!! இப்படியும் நடக்குமா ?? இவ்வளவு பணமும் தான் கொள்ளை அடிக்க முடியுமா என்று நினைக்க கூட முடியாத அளவுக்கு ஊழல். நடந்து முடிந்த வரலாறு காணாத, உலகம் கண்டிராத ஊழலை பற்றி மறுபடியும் நான் பெரிதாக, புதிதாக எடுத்துரைக்க தேவை இல்லை. வலை உலகத்தில் ஊழல் என்று தட்டினாலே முதலில் வருவது இச்செய்தியாய் தான் இருக்கும். இருந்தாலும் இதோ ஒரு சில உங்களுக்காக!!!

http://www.domain-b.com/industry/telecom/20101122_2g_scandal.html

http://www.bbc.co.uk/news/world-south-asia-11764415

இது வெறும் அனுமானத்தின் அடிப்படையில் சாற்றப்பட்ட குற்றச்சாற்று தானாம் !! திருவாளர் ராஜா அவர்கள் அனைத்தையும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே கலைஞரின் உத்தரவுகேற்ற செவ்வனே செய்து முடித்து (நாட்டையே முடித்து) விட்டதாக சொல்கிறார்கள்.

மேலே குடுக்கப்பட்ட லிங்கில் உள்ள செய்தியை படித்த பின்பு மேலும் இது சம்பந்தப்பட்ட செய்தியை எங்கிருந்து வேண்டுமானாலும் சேகரித்து கொள்ளலாம். கீழே குடுக்க பட்ட லிங்கில் உள்ள உரையாடலை கேட்ட பின்பு அது உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதையும் தன் சொந்த பகுத்தறிவு வைத்தே முடிவும் செய்து கொள்ளலாம். இது அவரவர் விருபத்திற்கு விட்டு விடலாம். இருந்தாலும் நாட்டின் அரசியலை பற்றி பெரிதும் கவலை ஏதும் இல்லாவிட்டாலும் நாட்டை பற்றி சிறிதேனும் கவலை படும் சாதாரண குடிமகனாய், என்னுடைய பகுத்தறிவு என்ன சொல்கிறது என்பதை மட்டும் நான் சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன்.

http://www.youtube.com/watch?v=6qXnxSxVaR4

இதுவரை படித்த செய்திகளும் தற்போது கேட்ட தொலை பேசி உரையாலடல்களையும் கூட்டி கழித்து பார்த்தால் 1 .76 லட்சம் கோடி என்ற கணக்கு வேண்டுமானால் தப்பாக போகலாமே தவிர கண்டிப்பாய் சில பல ஆயிரம் கோடிகளை நம் தலைவர்கள் ஏப்பம் விட்டது தெளிவாக தெரிகிறது. இதுவரை வெளி வந்த ஆதாரங்கள் வெறும் ஒரு சில விழுகாடுகளே. வெளி வர இருப்பது அல்லது வெளி வராமலேயே போக இருக்கும் ஆதாரங்கள் கண்டீப்பாக பல விழுக்காடுகள்.

உண்மையில் 1 .76 லட்சம் கோடி ஊழல் நடக்காமல் இருந்து இருக்கலாம் ஆனால் ஊழால் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா?? ஆதாரம் எங்கே என்று கேட்பவர்கள் நீதிபதிகளாய் இருந்தால் பரவா இல்லை !! சரி பாவம் அவர் சட்டப்படி தண்டனை குடுக்க சாட்சி கேக்கிறார் என்று நம்மை நாமே சமாதான படுத்தி கொள்ளலாம். பாமரர்கள் சாட்சி கேட்டால் ஐயோ பாவம் படிக்காதவர்கள், இன்றில்லாவிட்டாலும் நாளையாவுது புரிந்து கொள்வார்கள் என்று சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் சாட்சி கேட்பதோ நாலும் தெரிந்த, படித்த, வலை தளத்தில் நித்தமும் வளைய வரும் மேதாவிகள் (என்னுள் உள்பட).

நாட்டின் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் தற்போதைய நிலைமை என்னவென்று என்னுடன் லண்டனில் படித்து விட்டு பெரிய அளவில் தொழில் செய்து தன்னுடைய பரம்பரை தொழிலை மேலும் மேம்படுத்தும் கனவோடு இந்திய திரும்பிய சிலரின் புலம்பல்களில் இருந்து தெளிவாகவே தெரிந்தது இனிமேல் நான் கண்டிப்பாக வரும் காலத்தில் எந்த ஒரு தொழிலையும் தங்க தமிழ் நாட்டில் தொடங்கவும் முடியாது அப்படியே தொடங்கினாலும் தற்போது உள்ள வாரிசு அரசியலின் உள்ளூர் கட்டுமானத்தை மீறி அதை நல்ல விதமாக நடத்தவும் முடியாது. தமிழகத்தின் அத்துணை பெரிய நகரங்களிலும் வாரிசுகள் தற்போது குடியேறி அவர்களுக்குள் சமாதானம் பேசி பெருந்தன்மையாக பாகம் பிரித்து கொண்டார்கள். சரி இதற்கும் இப்போது நடந்த அல்லது நடந்து முடிந்ததாக சொல்லப்படும் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? என்ன செய்வது எதாவுது சொல்லி புலம்புவதை தவிர எனக்கு வேறு வழி தெரிய வில்லை.

இதற்கு முடிவு தான் என்ன !!! கண்டீப்பாக விடை என்னிடம் இல்லை ஆனால் கண்டீப்பாக வாரிசு அரசியலை இனிமேலும் அனுமதித்தால் நாம் என்றுமே வெள்ளைகாரனக்கு வேலை பார்த்து அடிமையாகவே இருந்து, வாழ்ந்து , கடைசியில் அப்படியே சாக வேண்டியது தான். நாட்டின் நட்பை பார்த்தால் படித்த பலரும் அதை தான் விரும்புகிறோம் என்றே நினைக்க தோன்றுகிறது. அடித்த கொள்ளையில் சாதி பார்த்தா பங்கு பிரித்தார்கள், இதில் சாதி சாயம் பூசி சட்டத்தில் இருந்து வேண்டுமானால் தப்பித்து கொள்ளலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கடவுளை நம்புவோர் கடவுளிடம் வேண்டுங்கள் நம்பாதவர்கள் உங்களால் இதற்கு ஒரு தீர்வு காண முடியுமென்றால் தயவு செய்து இனிமேலாவுது அதற்கான முயற்சிகளை எடுங்கள்.

இப்படிக்கு

வலைத்தளத்தில் வெட்டியாய் பொழுதை கழித்தாலும் நாட்டின் மீது கொண்ட உண்மையான கரிசனத்தில்

பிரபு

பின் குறிப்பு : நான் கண்டிப்பாக A . I . A . D . M . K ஆளு இல்லீங்கோ




சும்மா லுள்ளுலாயிக்கு

தற்போது ஜூ.வி இல் படித்தது -----

''என்னடா மச்சான்... வரப்போற சட்டமன்றத் தேர்தல் முடிவை 'ஸ்பெக்ட்ரம்' பாதிக்குமா? நீ என்ன நினைக்கிறே?''

''உனக்கு நம்ம ஜனங்களைப்பத்தி சரியா புரியலைனு நினைக்கிறேன். 'ஸ்பெக்ட்ரம்னா என்ன... புது பிராண்டு ரம் வந்திருக்கா'னு கேப்பாங்க!''

''அங்கேதான் நீ தப்பு பண்றே... கலைஞர் குடுத்த இலவச டி.வி-யில இங்கிலீஷ் நியூஸ் சேனல் பார்க்கிற அளவுக்கு நம்மாளுங்க தேறி ரொம்ப நாளாச்சுடா!''

11 May 2010

திருட வந்தவர்களுக்கு கூலி!

சிறுதாவூர் என்ற கிராமத்தில் ராமன் என்ற அதி புத்திசாலி வாழ்ந்து வந்தார். வணிகம், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதிலும், வழக்குகளில் சரியான தீர்ப்புகள் கூறுவதிலும் வல்லவர், கோடைக்காலத்தில் ஒருநாள், ராமனும் அவரது மனைவியும் தங்கள் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு திருடர்கள் மெதுவாக தோடத்துக்குள் நுழைந்து செடிகளுக்குப் பின் மறைவதை ராமன் பார்த்து விட்டார்.

சுதாரித்துக்கொண்ட அவர் தன் மனைவியிடம் மெதுவாக, "நம் வீட்டில் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்துள்ளனர்." என்று கூறவே, "ஐயோ திருடர்களா.. இப்போது என்ன செய்வது?" என்று அவர் மனைவி பதறினார்.
உடனே, "கத்தாதே..திருடர்களை எளிதாக பிடித்து விடலாம். நான் சொல்வதை மட்டும் செய்." என்று கூறினார்.
என்ன செய்ய வேண்டும் என்று தன் மனைவிக்கு கூறிய பின், திருடர்கள் பதுங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் சென்றார் ராமன்.

பின் சத்தமாக தன் மனைவியிடம், "தெரியுமா சேதி...அடுத்த தெருவில் கந்தசாமி வீட்டில் திருடு போய்விட்டதாம். நாம் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே நகைகள், பொற்காசுகள் அனைத்தையும் கொண்டு வா." என உத்தரவிட்டார். இதைக் கேட்ட திருடர்கள் குழம்பினர். ராமன் என்ன செய்யப் போகிறார் என உன்னிப்பாக கவனித்தனர். ராமனும் அவரது மனைவியும் சேர்ந்து பெரிய பெட்டியைக் கொண்டு வந்தனர். அதை தங்கள் கிணற்றில் வீசினர். பின்னர், "அப்பாடா, இனி கவலையில்லை, திருடர்கள் வந்தால் வீட்டில் பொருட்களைத் தேடிப் பார்த்து விட்டு ஏமாந்து திரும்புவார்கள். நாம் நிம்மதியாக தூங்கலாம் வா!" என தன் மனைவியிடம் சத்தமாக கூறி அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ராமன்.

இந்தக் காட்சியைக் கண்ட திருடர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அவர்களில் ஒருவன், "சத்தம் போடாமல் இங்கேயே இருப்போம். இரவு அவர்கள் தூங்கியவுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி விட்டு பொருட்களை எடுத்துச் சென்று விடுவோம்," என்று மகிழ்ச்சியாக கூறினான்.

இரவு நேரமானதும், இரண்டு பேரும் கிணற்றுக்கு அருகில் சென்று ஓசைப்படாமல் குடத்தில் கயிறு கட்டி தண்ணீரை வெளியேற்றி தோட்டத்தில் ஊற்றினர், நீண்ட நேரம் தண்ணீரை வெளியேற்றிய போதும், கிணற்றில் தண்ணீரின் அளவு குறையாததால் வெறுப்படைந்தனர். ஆனாலும் தங்கள் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை.
பொழுதும் விடிந்து விட்டது. இரவெல்லாம் தண்ணீர் இறைத்ததால் எழுந்து நிற்கக் கூட சக்தியின்றி இருவரும் அப்படியே விழுந்து கிடந்தனர்.


அவர்களிடம் சென்ற ராமன், "நண்பர்களே, வெறும் கற்கள் நிரம்பிய பெட்டிக்காக இரவெல்லாம் கண் விழித்து என் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றியுள்ளீர்கள். உங்களுக்கு நான் எவ்வளவு கூலி தர வேண்டும்?" என சிரித்துக் கொண்டே கேட்டார்.


உடனே அவர் கால்களில் விழுந்த இருவரும், "ஐயா, தெரியாமல் உங்கள் வீட்டில் திருட வந்து விட்டோம். இரவு முழுவதும் தண்ணீர் இறைத்ததால் உழைப்பின் அருமையை இப்போது உணர்ந்தோம். இனி திருட மாட்டோம். எங்களை மன்னித்து விட்டு விடுங்கள்." என கெஞ்சினர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி, தண்ணீர் இறைத்ததற்காக கூலி கொடுத்து அனுப்பி வைத்தார் ராமன்

பொறுத்தார் பூமி ஆள்வார்’

பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? பொறுமையாயிருப்பவர்களுக்கு பூமியையே ஆளும் பாக்கியம் உண்மையில் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் பொறுமை இல்லாதவர்களுக்கு, அதிர்ஷ்டம் வராது என்பது தான்உண்மை!


அரேபிய இரவுகளில் ஒரு கதை உண்டு. கெய்ரோவைச் சேர்ந்த ஓர் இளைஞன் மிகுந்த ஏழையாக இருந்தான். அவனுடைய முன்னோர்கள் செல்வந்தர்களாக இருந்தனர். ஏழைமையில் வாடிய அவன் ஓர் இரவில் ஓர் அதிசயக் கனவு கண்டான். கனவில் ஒரு குரல் “பாக்தாத்துக்குச் செல்! அங்கே உனக்காக அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!” என்றது. மறுநாளே அந்த இளைஞன் பாக்தாத்தை நோக்கிக் கிளம்பி விட்டான். பயணம் செய்து களைத்துப் போனதால், நடுவில் ஒரு மசூதியில் தங்கி ஓய்வெடுத்தான்.


அன்று இரவு, சில கொள்ளைக்காரர்கள் அந்த மசூதியில் தாங்கள் திருடிய பொருட்களுடன் ஒளிந்து கொள்ள, அவர்களைத் துரத்தி வந்த காவலர்கள் மசூதிக்குள் நுழைந்து அவர்களைக் கைது செய்தனர். அவர்களுடன் அந்த இளைஞனும் கைது செய்யப்பட்டான். விசாரணையின் போது அவனைக் குற்றமற்றவன் என்று தெரிந்து கொண்ட காவலர் தலைவன், அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.

ளைஞன் தன்னுடைய கனவை விளக்கினான். அதைக்கேட்டு சிரித்த காவலர், அவனைத் தலைவரிடம் அழைத்துச் சென்றனர். தலைவன், “நான் கூடத்தான் பல ஆண்டுகளாக அப்படிப்பட்ட ஒரு கனவு காண்கிறேன். என் கனவில் வரும் குரல் “உடனே கெய்ரோவிற்குப் போ! அங்கு பனைமரத்தின் கீழ் உள்ள வற்றிய கிணற்றில் ஒரு புதையல் இருக்கிறது” என்று சொல்கிறது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் நீ ஒருமுறை கனவு கண்டு, அதை நம்பி விட்டாய்” என்றான்.


அடுத்த நாள் மாலை, இளைஞன் பாக்தாத் நகரை அடைந்தான். நகர்க் காவலன் இளைஞனைக் கண்டு சந்தேகித்து அவனைக் காவல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றான். அவரிடமும் இளைஞன் தன் கனவைப் பற்றிக் கூற, அவரும் சிரித்துக் கொண்டே “பத்து ஆண்டுகளாக நானும் ஒரு கனவு காண்கிறேன். ஒரு குரல் “கெய்ரோவிற்குச் செல்! அங்கே ஒரு வீட்டில் நான்கு வாயில்களில் மூன்று மூடப்பட்டிருக்கும். வீட்டின் மேற்கு மூலையில் ஒரு பனைமரத்தின் கீழ் வற்றிய கிணற்றினுள் ஒரு புதையல் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதேயில்லை. போசாமல் நீ உன் ஊருக்குச் செல்!” என்றார்.


உடனே அந்த இளைஞன் தன் ஊரான கெய்ரோவை நோக்கி விரைந்தான். அந்த அதிகாரி குறிப்பிட்ட புதையலின் இருப்பிடம் அவனது வீடுதான். அவன், வீட்டை அடைந்து கிணற்றைத் தோண்ட, புதையலும் கிடைத்தது. தன்னிடம் இருந்த புதையலைக் கொண்டு பெரிய பரப்பளவுள்ள நிலம் வாங்குவதில் மும்முரமாக இருந்த அவன், ஒரு வயதானவரை நாடிச் சென்றான்.

தன்னிடமுள்ள பெரிய நிலத்தை விற்க முன் வந்த அந்தப் பெரியவர் இளைஞனிடம், “என்னுடைய முன்னோர்கள் இந்த நிலத்தில் மிக மதிப்பு வாய்ந்த புதையல் இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் அதை நம்பவில்லை. இனிமேல் புதையல் கிடைத்தும் எனக்கு பயனில்லை. அதனால் இதை உனக்கு விற்கிறேன். அவசரப்பட்டு இதை நீ உடனே விற்று விடாதே” என்றார்.



ஆனால் லாபம் ஈட்டுவதில் குறியாக இருந்த அந்த இளைஞன், நிலத்தின் விலை ஏறியவுடன் அதை நல்ல லாபத்திற்கு விற்றான். அதற்கு அடுத்த ஆண்டே, அந்த நிலத்தில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்டு நடந்த முயற்சியில், வைரச் சுரங்கமே இருப்பது தெரிந்தது. அந்த நிலத்தை விற்ற இளைஞன், தன் அவசர புத்தியை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானான், அடுத்த் சில ஆண்டுகளில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வறுமையின் பிடியில் சிக்கி இறந்தான்.

தமிழ் நகைச்சுவை

''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''

'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'

-----------------------------------------------------------------------------------------------

டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?

நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்

தேடி வந்தேன்

-----------------------------------------------------------------------------------------------
''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''

-----------------------------------------------------------------------------------------------
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

-----------------------------------------------------------------------------------------------

courtesy: tamiljokes4u