
எடுத்துகொள் என் கண்களை!!!
உனக்காக நான் செய்யும்
தியாகமல்ல இது .....
நான் உண்மையில் குருடனாகவே இருக்க
ஆசைப்படுகிறேன்
நீ
என்னருகே இருப்பதானால் ........
மருண்ட உன் விழிகளில்
என் விழிகொண்டு
நீ
பார்த்து ரசிக்கும் இவ்வுலகை
வர்ணம் பூசிய வார்த்தைகளால்
நீ
வர்ணித்தாலே போதும்......
நான்
சாகாமல் சொர்க்கம் கண்ட
அனுபவம் பெறுவேன்
உன்னால்
வாழும்போதே கண்ணளித்த
தியாகியும் ஆவேன்
அதனால் .....
நான் குருடனாகவே இருக்க
ஆசைப்படுகிறேன்
நீ
என்னருகே இருப்பதானால் ............
பிரபு