20 March 2008

என் கிறுக்கல்கள்

என்தாயே!! தமிழ் மகளே!!

என்னித்திரையில் நித்தம் வரும் என்னவளே ......

என்னெஞ்சில் நீங்காத இடம் பெற்ற பொன்மகளே .......

நாடு பல கடந்து

வாழ்வில்

ஏற்றம் பல அடைந்து

என்னையே நான் மறந்தாலும்

நாளும் உனை தழுவிடுவேன்

என் காதலியாக .......

அனுதினமும் தொழுதிடுவேன்

என் அன்னையாக ........

எந்நாளும் உனை மறவேன்

என்தாயே!! தமிழ் மகளே!!

பிரபு







நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!

நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!


ஒவ்வொரு மாதமும்

இருவரின் முகமும்

தொடக்கத்தில் பிரகாசமாகவும்

பின்பு தேய்ந்தும் போவதால் ..............

குறிப்பு: சம்பள கவர்க்கு wait பண்ற பெண்கள சொன்னேன்பா

பிரபு






புதை மணல்



நிரந்த வலிகள் ........



நிறைவேறா ஆசைகள் ........



வாழ்வின் பல கட்டத்தில் அடி வாங்கி வாங்கியே



மரத்து போன ஏன் இதயம் ////






வற்றாத கண்ணீரும் ......



விரக்தியான பார்வையும் மட்டுமே



கொண்ட என் விழிகள் ..........



மூடித் திறக்கும் இமைசிறைக்குள்



மூழ்கி போன பாலைவனம் மட்டுமல்ல



அது ஒரு புதை மணலும் கூட !!!



என் கனவுகள் அனைத்தும்



வெறும் கானல் நீராய்



காணாமல் போனதால் !!!!!






பிரபு














"OUTLOOK"

சரித்த்ரங்களை புரட்டி போடும் அளவுக்கு சாதனை செய்து

"OUTLOOK" ன் அட்டை படத்தில் வரத் துடிக்கும்

இளைஞர்களில் நானும் ஒருவன் தான் !!!

ஆனால் - என்னை முந்திக் கொண்டான் என் இந்திய சகோதரன்

ஆம் !! இன்று அவன் படம் "OUTLOOK" இல்

சாதனையாலனாய் அல்ல

வெய்யிலில் கருகிய உடலையும்

வறுமையில் வெம்பிய மனத்தையும்

தற்காலிகமாய் மறைக்க ஒரு சட்டை மட்டுமே தேடும்

ஒரு சாமானியனாய் ......

பிரபு





பிச்சைக்காரி!!!

மிக அழகாய் இருக்கிறாள் அவள்

ஆனால்.. அவளின் துணி தாறு மாறாய் கிழிந்திருக்கிறது !!!!

அவளின் கூந்தல் மோசமாக கலைந்திருக்கிறது !!!

அவளின் கண்கள் இரத்தமாய் சிவந்திருக்கிறது !!!

அவசரம் வேண்டாம்.....

அவள் கற்ப்ழிக்க படவில்லை !!!

பரந்த இந்தியாவில்

உடுத்த துணி இல்லாமல்..

உண்ண உணாவில்லாமல்...

உறங்க இடமில்லாமல்...

உயிர் வாழும் ஒரு நிரந்தர பிச்சைக்காரி தான் அவள் !!!

பிரபு




கறுப்பு பணம் !!!

இதுவும் கறுப்பு பணமா???

பிச்சைக்காரன் வங்கி கணக்கில் பத்து லட்ச ரூபாய்!!!

பிரபு




படையல் உணவு!!!!

ஏய்!! பணக்கார சவமே

இறந்த உனக்கு படையலிடும்

அந்த ஒருவேளை உணவை

பசீத்தவனுக்கு பரிமாற சொல்

ஒரு உயிராவுது பிழைகட்டும்!!!

பிரபு





உறுப்பு தானம்!!!!

நாம் இறந்தபின்

மண்ணோடு மண்ணாய் மக்கிப்போகும்

நம் மகத்தான உறுப்புக்களை தானம் செய்வோம்.......

இறந்தும் வாழ்வோம் மேலும் நூறு ஆண்டுகள் !!!!

பிரபு

தத்துவங்கள்

Helmet போட்டா மண்டைய பாதுகாக்கலாம்.

ஆனா ,

மண்டைய போட்டா helmetta பாதுகாக்க முடியுமா?

---------------------------------------------------------------------------------------------

முட்டை போடுற கோழிக்கு ஆம்லெட் போடத் தெரியாது.

ஆம்லெட் போடுற நமக்கு முட்டை போடத் தெரியாது

---------------------------------------------------------------------------------------------

பஸ்ல நீ ஏறினாலும் ...பஸு உன்மேல் ஏறினாலும் ...

டிக்கெட் வாங்க போரதேன்னவோ நீ தான் .....

---------------------------------------------------------------------------------------------

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேடர்....

உள்ளே போய் டிக்கெட் வாங்கறது ஆபரேசன் தியேடர் ...

---------------------------------------------------------------------------------------------

சிற்பி கல்ல உலியால அடிச்சா அது "கலை"

ஆனா

நாம சிற்பிய உலியால அடிச்சா அது "கொலை"

---------------------------------------------------------------------------------------------

சன்டே ஆனா ஜாலியா சண்டை போடலாம்

ஆனா

மண்டே ஆனா ஜாலியா மண்டாயா போட முடியுமா ??

---------------------------------------------------------------------------------------------

டீ கப்புல டீ இருக்கும்

அப்ப

வோல்டூ கப்புல வோல்டூ இருக்குமா???????

---------------------------------------------------------------------------------------------

செருப்பு இல்லாம நாம நாடக்கலாம்,

ஆனா

நாம இல்லாம செருப்பு நடக்க முடியுமா???

---------------------------------------------------------------------------------------------

என்ஜீனியரிங் காலேஜ்லே படிச்சா நீங்க என்ஜீனியர் ஆக முடியும்.

ஆனா

பிரெசிடென்சி காலேஜ்லே படிச்சா பிரெசிடென்ட் ஆக முடியாது.

---------------------------------------------------------------------------------------------

வாழை மரம் தார் போடும்,

ஆனா

அதை வச்சு ரோடு போட முடியாது!

---------------------------------------------------------------------------------------------

பாஸ்போர்ட் ஸைஸ் போட்டோவ பாஸ்போர்ட்ல ஒட்டாலாம்

அப்ப

ஸ்ஸ்டாம்ப் ஸைஸ் போட்டோவ ஸ்டாம்பில ஓட்ட முடியுமா??

---------------------------------------------------------------------------------------------

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.

---------------------------------------------------------------------------------------------

கொலுசு போட்டா சத்தம் வரும்.

ஆனா,

சத்தம் போட்ட கொலுசு வருமா ?

---------------------------------------------------------------------------------------------

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம்

---------------------------------------------------------------------------------------------

T Nagar போனா டீ வாங்கலாம்.

ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?

---------------------------------------------------------------------------------------------

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது.

---------------------------------------------------------------------------------------------

இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு.

அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .

---------------------------------------------------------------------------------------------

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,

ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

---------------------------------------------------------------------------------------------

ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங் 'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

---------------------------------------------------------------------------------------------

அரியர் வைத்தோர் அறிவுடயார்

அறிவிலார்ஆல் கிலியர் செய்பவர்.

படிப்பவரை கண்டால் வயிர் எரிபவர் சங்கம்...

---------------------------------------------------------------------------------------------

மேல இருந்து கீழே விழுந்தா அருவி..

கீழே இருந்து மேலே பறந்தா குருவி

---------------------------------------------------------------------------------------------

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும்

அதால

ஒரு தடவை கூட தியேட்டர்ல ரீலீஸ் பண்ண முடியாது

---------------------------------------------------------------------------------------------

பாங்க் ல பணம் போடலாம்.

ஆனா

பணத்துல பாங்க் க போட முடிஉமா?

---------------------------------------------------------------------------------------------

ஸ்விட்ச் போட்டா பேன் சுத்தும்

ஆனா

பேன் போட்டா ஸ்விட்ச் சுத்துமா????

---------------------------------------------------------------------------------------------

தீ குட்சீய உரசுணா தீ வரும்...

ஆனா

தீ யை உரசுணா தீ குட்சீ வருமா ?

---------------------------------------------------------------------------------------------

பவர் பெயிலிருக்கும் லவ் பெயிலிருக்கும்என்ன வித்யாசம்?

பவர் பெயிலியர் ஆனா, வீடு இருட்டாகும்

லவ் பெயிலியர் ஆனாலோ, வாழ்க்கை வெளிச்சமாகும்

---------------------------------------------------------------------------------------------

உடம்புல சுகர் இருந்தாலும் டேஞ்சர்,

மனசுல பிகர் இருந்தாலும் டேஞ்சர் ....

என்ன நான் சொல்றது....

---------------------------------------------------------------------------------------------

காதலி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி.

ஒழுங்கா பாத்துக்கலேன்னா....

காக்கா தூக்கிட்டு போயிடும்....

---------------------------------------------------------------------------------------------

பாயாசத்தை நாலு நாள் வெச்சிருந்தா பாய்சன் ஆயிடும்.

ஆனா பாய்சனை நாலு நாள் வெச்சிருந்தா பாயாசம்

ஆயிடுமா?

.....யோசிங்க..... யோசிங்க......

---------------------------------------------------------------------------------------------

பிரஷ் பண்ணாத பல்லும்

மெசேஜ் அனுப்பாத செல்லும்

நல்ல இருந்ததா சரித்திரமே இல்ல...

---------------------------------------------------------------------------------------------

எக்ஸாம்ல ஃபெய்ல் ஆகிட்டா

திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம்.

ஆனா,

பாஸ் ஆகிட்டா

திரும்ப படிச்சு ஃபெய்ல் ஆக முடியுமா?

---------------------------------------------------------------------------------------------

குளவி கொட்டினா வலிக்கும்.

தேள் கொட்டினா கூட வலிக்கும்.

ஆனா

முடி கொட்டினா வலிக்குமா?

(சில பேருக்கு மனசு வலிக்கும் அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது)

---------------------------------------------------------------------------------------------

நாம அடிச்சா அதுக்கு பேரு மொட்டை

தானா விழுந்தா அதுக்கு பேரு சொட்டை

இது எப்படி இருக்கு???

---------------------------------------------------------------------------------------------

என்னதான் ஜாவால Thread இருந்தாலும்

அத வச்சு லுங்கி கூட நெய்ய முடியாது.

---------------------------------------------------------------------------------------------

மின்னலைப் பார்த்தா கண்ணு போயிடும்..

பார்க்கலைன்னா மின்னல் போயிடும்.

---------------------------------------------------------------------------------------------

பவர் கிளாஸை,

என்னதான் ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தாலும்

அது கூலிங் கிளாஸ் ஆகாது

---------------------------------------------------------------------------------------------

Tea மாஸ்டர் என்னதான் லைட்டா Tea போட்டாலும்

அதுலயிருந்து வெளிச்சம் வராது.

---------------------------------------------------------------------------------------------

அண்ணே..

விடிய விடிய டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?

---------------------------------------------------------------------------------------------

சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!

nandri - வித்தியாச வித்தியாசமாக யோசிப்போர் சங்கம் (ISO 9001 Certified)

---------------------------------------------------------------------------------------------

பையி 'கட்'டானா தைக்கலாம்;

துணி 'கட்'டானாலும் தைக்கலாம்;

தோலு 'கட்'டானாகூட தைக்கலாம்;

ஆனா,கரன்ட் 'கட்'டானா தைக்க முடியுமா?

nadrikuriyavarkal - இருட்டுல உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்

---------------------------------------------------------------------------------------------

அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும்,

ஆனா

அமெரிக்காவை தொலைச்சது யாரு?

---------------------------------------------------------------------------------------------

ரிஸல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா,

லீவு நாளு நரகம் ஆயிரும்.

சன்தோஷம்தாங்க முக்கியம்!!!-

பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்.

---------------------------------------------------------------------------------------------

ஓட்டýல் சாப்பிட்டுப் பணம் இல்லேன்னா

மாவு ஆட்டச் சொல்வாங்க.

ஆனா,

பேருந்தில் ஏறியபிறகு பணம் இல்லேன்னா,

பேருந்து ஓட்டச் சொல்வாங்களா?

---------------------------------------------------------------------------------------------

நாம சென்னை சிட்டியில வாழ முடியும்.


பெங்களூர் சிட்டியிலயும் வாழமுடியும்.


ஆனா, எலக்ட்ரிசிட்டியில வாழமுடியுமா?

---------------------------------------------------------------------------------------------

சிவாஜி படத்துல ரஜினி நடிக்க முடியும்.


ஆனா, இப்ப ரஜினி படத்துல சிவாஜி நடிக்க முடியுமா?

---------------------------------------------------------------------------------------------

ஒரு மாத்திரை சாப்பிட்டா தூக்கம் வரும்.


பத்து மாத்திரை சாப்பிட்டா...?


தூக்க ஆள் வரும்.

---------------------------------------------------------------------------------------------

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

---------------------------------------------------------------------------------------------

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,


மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்

---------------------------------------------------------------------------------------------

லவ்வர்ஸ் டே அன்னைக்கு லவ்வருக்கு முத்தம் கொடுக்கலாம்.

ஆனால்

டீச்சர்ஸ் டே அன்னைக்கு டீச்சரை முத்தமிட முடியுமா..?

---------------------------------------------------------------------------------------------

என்னதான் கருணாநிதி திமுக வானாலும்

அவர் வீட்டு மாடு

அம்மான்னு தான் கத்தும்

---------------------------------------------------------------------------------------------

என்ன தான் மீனுக்கு நீச்சல் தெரிஞ்சாலும் அதால குழம்புல

நீந்த முடியாதே !!

மெரினா பீச் மீன் வியாபாரிகள் சங்கம் சார்பாக

---------------------------------------------------------------------------------------------

07 March 2008

இரு

அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!

அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!

முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!

கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!

எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

துணிவே துணை

ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.-

ஸர் டி.ப்ரௌன்
ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையாகில், அவன் வாழ்வு சிறக்காது! -

ஷாம்பர்ட்.

பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!-

நெப்பொலியன் ஹில்
1. சிறந்த வழிநாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி-


ஸ்ரீ அன்னை
1. கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.

2. படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!

3. பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.

4. காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!

5. விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

வழிகாட்டும் 7 விடயங்கள்1

) சிந்தித்து பேசவேண்டும்

2) உண்மையே பேசவேண்டும்

3) அன்பாக பேசவேண்டும்.

4) மெதுவாக பேசவேண்டும்

5) சமயம் அறிந்து பேசவேண்டும்

6) இனிமையாக பேசவேண்டும்

7) பேசாதிருக்க பழக வேண்டும்

பெருந்தன்மையே முதல் படி1

) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.

2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.

3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.

4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன

.*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

விவேகானந்தரின் பொன்மொழிகள்

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.*

இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

நன்மை தரும் 7 விசயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை

2) கோபத்திலும் பொறுமை

3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி

4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்

5) துன்பத்திலும் துணிவு

6) செலவத்தி;லும் எளிமை

7) பதவியிலும் பணிவு

பொன்மொழிகள்

காலண்டரில் கண்ட முத்துக்கள்

திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு

செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.

புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.

சனி: அன்பளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.

ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.