20 March 2008

என் கிறுக்கல்கள்

என்தாயே!! தமிழ் மகளே!!

என்னித்திரையில் நித்தம் வரும் என்னவளே ......

என்னெஞ்சில் நீங்காத இடம் பெற்ற பொன்மகளே .......

நாடு பல கடந்து

வாழ்வில்

ஏற்றம் பல அடைந்து

என்னையே நான் மறந்தாலும்

நாளும் உனை தழுவிடுவேன்

என் காதலியாக .......

அனுதினமும் தொழுதிடுவேன்

என் அன்னையாக ........

எந்நாளும் உனை மறவேன்

என்தாயே!! தமிழ் மகளே!!

பிரபு







நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!

நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!


ஒவ்வொரு மாதமும்

இருவரின் முகமும்

தொடக்கத்தில் பிரகாசமாகவும்

பின்பு தேய்ந்தும் போவதால் ..............

குறிப்பு: சம்பள கவர்க்கு wait பண்ற பெண்கள சொன்னேன்பா

பிரபு






புதை மணல்



நிரந்த வலிகள் ........



நிறைவேறா ஆசைகள் ........



வாழ்வின் பல கட்டத்தில் அடி வாங்கி வாங்கியே



மரத்து போன ஏன் இதயம் ////






வற்றாத கண்ணீரும் ......



விரக்தியான பார்வையும் மட்டுமே



கொண்ட என் விழிகள் ..........



மூடித் திறக்கும் இமைசிறைக்குள்



மூழ்கி போன பாலைவனம் மட்டுமல்ல



அது ஒரு புதை மணலும் கூட !!!



என் கனவுகள் அனைத்தும்



வெறும் கானல் நீராய்



காணாமல் போனதால் !!!!!






பிரபு














"OUTLOOK"

சரித்த்ரங்களை புரட்டி போடும் அளவுக்கு சாதனை செய்து

"OUTLOOK" ன் அட்டை படத்தில் வரத் துடிக்கும்

இளைஞர்களில் நானும் ஒருவன் தான் !!!

ஆனால் - என்னை முந்திக் கொண்டான் என் இந்திய சகோதரன்

ஆம் !! இன்று அவன் படம் "OUTLOOK" இல்

சாதனையாலனாய் அல்ல

வெய்யிலில் கருகிய உடலையும்

வறுமையில் வெம்பிய மனத்தையும்

தற்காலிகமாய் மறைக்க ஒரு சட்டை மட்டுமே தேடும்

ஒரு சாமானியனாய் ......

பிரபு





பிச்சைக்காரி!!!

மிக அழகாய் இருக்கிறாள் அவள்

ஆனால்.. அவளின் துணி தாறு மாறாய் கிழிந்திருக்கிறது !!!!

அவளின் கூந்தல் மோசமாக கலைந்திருக்கிறது !!!

அவளின் கண்கள் இரத்தமாய் சிவந்திருக்கிறது !!!

அவசரம் வேண்டாம்.....

அவள் கற்ப்ழிக்க படவில்லை !!!

பரந்த இந்தியாவில்

உடுத்த துணி இல்லாமல்..

உண்ண உணாவில்லாமல்...

உறங்க இடமில்லாமல்...

உயிர் வாழும் ஒரு நிரந்தர பிச்சைக்காரி தான் அவள் !!!

பிரபு




கறுப்பு பணம் !!!

இதுவும் கறுப்பு பணமா???

பிச்சைக்காரன் வங்கி கணக்கில் பத்து லட்ச ரூபாய்!!!

பிரபு




படையல் உணவு!!!!

ஏய்!! பணக்கார சவமே

இறந்த உனக்கு படையலிடும்

அந்த ஒருவேளை உணவை

பசீத்தவனுக்கு பரிமாற சொல்

ஒரு உயிராவுது பிழைகட்டும்!!!

பிரபு





உறுப்பு தானம்!!!!

நாம் இறந்தபின்

மண்ணோடு மண்ணாய் மக்கிப்போகும்

நம் மகத்தான உறுப்புக்களை தானம் செய்வோம்.......

இறந்தும் வாழ்வோம் மேலும் நூறு ஆண்டுகள் !!!!

பிரபு

3 comments:

Unknown said...

கவிதைகள் அத்தனையும் அருமை..

Prabu Natarajan said...

மிக்க நன்றி நில அவர்களே. நான் கவிஞன் அல்ல இருந்தாலும் உங்கள் பின்னூட்டங்களும் ஊக்கமும் நிச்சயம் ஒரு நாள் என்னையும் கவிஞன் ஆக்கலாம்

TR Ramesh said...

Excellent Blog.....Keep it up