29 April 2009

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள்

நான் 21 -ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறேனா என்ற சந்தேகமும், அது உண்மை என்றால் இனி தமிழ் இனத்திற்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி பயமும் வருகிறது. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு தமிழக அரசியல் வாதிகள் தன சொந்த இன மக்களின் தன உறவுகளின் ரத்தத்தை சுவைக்கும் மிருகங்களாவே மாறி விட்டதை பார்க்கும் போது எண்டா தமிழ் நாட்டில் பிறந்தோம் என்று மிகவும் வருத்த படுகிறேன். இத்தனை கொடுமைகளையும் பார்த்து கொண்டு என்னாலும் எதுவும் என் மக்களுக்கு செய்ய முடிய வில்லையே என்று எண்ணும் போது இயலாமையில் அழுகை மட்டுமே வருகிறது.

தமிழ் நாட்டிலோ அல்லது புலம் பெயர் மக்கள் சிந்துவதோ அல்லது சிந்த விரும்புவதோ வெறும் கண்ணீரை மட்டுமே ஆனால் ஈழத் தமிழர்கள் நாள் தோறும் சிந்துவதோ இவ்வளவு கொடுமையிலும் விடுதலை வேட்கை அடங்காத சிறுதும் சீற்றம் குறையாத தன ரத்தத்தை. யோசிப்பீர்களா நாற்காலி வெறி பிடித்த நயவஞ்சகர்களே !!!

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் அதிர்வின் Report
பிரசுரித்த திகதி : 29 Apr 2009

கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் முடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார்.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரவேண்டிய பொறுப்பை மக்களாகிய உங்களிடன் நாம் ஒப்படைக்கிறோம். உண்ர்ச்சி மிகு அதிர்வு வாசகர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

மிக கொடுமையான அந்த படங்களை காண

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1240995334&archive=&start_from=&ucat=3&

No comments: